Pages

Saturday, March 12, 2011

கிராமத்து நண்பனுக்கு

 

கண்மூடி யோசிக்கிறேன்
காலங்களின் மாற்றத்தில்
நம் வாழ்க்கையும்
மாறித்தான் போய் இருக்கிறது

ஒய்யாரமாய் நாம் நடந்து போகும்
ஒற்றையடி பாதையில்
டிராபிக் போலீஸ் போல் நின்ற
அந்த பனை மரம்
கொஞ்சம் வாடி போய் இருக்கிறது
வா நாம் வந்து இருக்கிறோம் என்று சொல்வோம்
அது வசந்த புன்னகை
பூத்து விடும்

கண் ரத்தமாய்
மாறினாலும்
கரை ஏற மனது இல்லாமல்
ஆட்டம் போட்ட
அந்த கம்மாய் குளம் கொஞ்சம்
உடம்பை குறைத்து
இருக்கிறது
இங்கேயும் வந்து விட்டார்களா
பட்டணத்தார்கள்
விலை நிலத்தையும்
கூட விட்டு வைக்காதவர்கள்
இதை மட்டுமா விட்டு விடுவார்கள்
நண்பா....

பட்டணத்து வாழ்க்கையில்
பக்கத்து வீட்டு நபர்கள் கூட
யார் என்று தெரியாமல்
போர் அடித்து விட்டது

பார்த்து சிரிக்க கூட
பைசா கேட்பார்கள் போல

கிராமத்து வாழ்க்கையில்
சிட்டு குருவி போல்
பரந்த நாம்
இன்று மாட்டி கொண்டோம்
இயந்திரமான வாழ்க்கையில்

யாரை குறை சொல்ல ....

எப்போவது
நம் கிராமத்திற்கு வரும்
போது எல்லாம்
தாயின் மடியில்
படுத்து உறங்கின சுகம் ...

நம் நட்பின் சுவடுகளை
சுமந்து கொண்டு அலையும்
நம் கிராமம் என்றும்
அழியாது
நம் நினைவை விட்டு
நம் நட்பை போல்
நீங்காத உறவாய் இன்றும் என்றும்

No comments:

Post a Comment