Pages

Tuesday, June 28, 2011

உன் தன்னலமற்ற அன்பினால் ,,,,

உன் பசி மறைத்து, என் பசியற்றினாய்
என் சந்தோஷத்தில் நீ சந்தோசம் அடைந்தாய்
என்னகொன்று என்றால்,நீ துடித்துப்போவாய்
எதுக்கு அம்மா உனக்கு என் மீது இவ்வளோ பாசம்.,

உனக்கு நான் என்ன செய்தேனென்று என்மீது இன்னும் அன்பு கொண்டிருக்கிறாய் .

விளையாட்டுக்கு கூட நீ என்மீது கோபம் கொண்டதில்லை
உன் அன்பால் என்னை வழிநடத்தினாய்,உன் பாசத்தால் பசியற்றினாய்.

எனக்கு நீ இமையாக இருந்தும் ,நான் உனக்கு சுமையாக தெரியவில்லை .,


எனக்கு காய்ச்சல் வந்தது உனக்கு தெரிந்தால்
இரவு முழுவதும் தூங்க மாட்டாய் என்று மறைத்தும் ,உனக்கு தெரிந்து போகும் என் முகத்தைப்பார்த்து ,அப்பொழுது நீ என்மீது காட்டும்
அன்பை பார்த்து காய்ச்சல் தொடர்ந்தால் என்னவென்றுத்தோணும் எனக்கு .,

நான் எங்காவது வெளியில் சென்று தாமதமாகினால்.,அதுவரை நீ நரகத்தை அனுபவித்து கொண்டிருப்பாய் .,
நீ இருக்கும்போது இறைவன் எதற்கு ,நீ இருப்பதினால் துன்பமில்லை எனக்கு ,,,,,
மறுபடியும் கேட்கிறேன் ????எதுக்கு அம்மா உனக்கு என் மீது இவ்வளோ பாசம்.,
அதுசரி ,நான் யாரேன்றுத்தெரியாமலே,என்னை பத்துமாதம் சுமந்தாயே ....என்னை புரிந்தப்பிறகும் என்னை வாழ்நாள் முழுவதும் சுமக்கிறாயே...,,,இதற்கு ஈடு என்ன செய்ய முடியும் என்னால்
காலங்கள் மாறினாலும் .,பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் .,உன் அன்பு மாறாது அம்மா .,எனால்
மாறுவதற்கு நீ என்ன மனிதப்பிறவியா .,
உன் பாதங்கள் தொடும்போது தெரியும் நீ எனக்காக நடந்த தூரம் எவளவென்று.,


மருஜென்மதிலும் நீயே என் தாயாக வேண்டும்.,அப்படி நடக்குமானால் இப்போதே இறப்பதிற்கு கூட தயாராக இருக்கிறேன் .,உன் தாலாட்டை கேட்க.,,


உன் அன்பை ஈடு செய்ய என்ன இருக்கிறது என்னிடம் உன் அன்பை தவிர.,

Monday, June 20, 2011

உறங்கபோகும் போது தான்

உன்
நினைவுகளை
பரிசளித்து போனாய்...
இரவு
உறங்கபோகும் போது தான்
தெரிந்தது
பதிலுக்கு உறக்கம்
பறித்து போனாய் என்று...

நான் தொலைக்க போகிறேன் .....

நான் தொலைக்க போகிறேன் ..... 

தினமும் தேடி கொண்டுதான் இருக்கிறேன் ...
தொலைந்து போன இதையத்தை அல்ல ...
யாருக்காக தொலைக்க போகிறேன் என்று ..
என்றும்
இதையதுடன்
உங்கள்
நண்பன் ..


Sunday, June 12, 2011

அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!!

அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!!



(அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின் வலிகள் )
...


அம்மா...

எழுத வார்த்தைகள் இல்லாமல்

தொடங்குகிறேன்...!!



பருவம் வரை பக்குவமாய்

வளர்த்து விட்டாயே



ஊர் சண்டை இழுத்து வந்தாலும்

உத்தமன் என் பிள்ளை என்று

விட்டு கொடுக்காமல் பேசுவாயே

அம்மா..!!



நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்

தட்டி சென்ற நாட்கள்..!!



செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "

போய்வாட என நீ சொல்ல

இந்த வயதில் கடைக்கு போவதா?..

என நான் சொன்னேன்..!!



இன்றோ..

இங்கே கண்ணுக்கு தெரியாத

யாரோ ஒருவருக்காக ஓயாமல்

வேலை செய்கிறேன் அம்மா..!!



நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்

உந்தன் கை பக்குவ உணவு

நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.

இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!



கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா

சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல

பத்து நிமிஷமா..!, நான் வெளியல

சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி

கிளம்பிய தருணங்கள்..!!



இன்றோ..

இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு

சாப்பிடும் போதே கண்கள் களங்க

இன்று காரம் கொஞ்சம் அதிகம்

போய்விட்டது என கடைக்காரர்

சொல்ல..!!



என்னக்கு மட்டும் தெரிந்த

உண்மை..!!

பாசமுடன் நீ அளித்த உந்தன்

ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது

ஏங்குகிறேன் அம்மா..!!



அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்

வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்

தடவி விடும் எண்ணெய் துளிகள்

வேண்டா வெறுப்பாய் நிற்கும்

நான்..!!



இன்றும்

என் தலை முடி சகாராதான் அம்மா

உந்தன் கை ஒற்றை எண்ணெய்

துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!



ஆசையால்..

மழையில் நனைந்து வர

முனுமுனுத்தபடி துடைப்பாய்

உந்தன் முந்தானையில்



இப்போது நனைகிறேன்

ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,



அத்தி பூக்கும் தருணமாய்..!

என்றாவது ஒருநாள் என்னை

திட்டும் நீ..! அந்த நொடியில்

எதிர்த்து பேசினேனே அம்மா..!!



இன்றோ..

இங்கே உயர் அதிகாரி திட்ட

சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே

அம்மா..!!

என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!



தொலைபேசியில்...

உனக்காக, தேடி திரிந்து பார்த்து,

பார்த்து வாங்கிய புடைவையை பற்றி

சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்

வருமே..! கண்ணு உனக்காக

ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது

எடுத்துகிட்டு போடா என்று..!!



எப்படி அம்மா சொல்வேன் எந்தன்

அன்பையும் , எண்ணத்தையும்



என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...

கைபேசியை எடுத்து , அம்மா....என்று

சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது

எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு

நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா

இருக்க..!!!



என் அன்னை ஆயிற்றே...

எந்தன் ஒற்றை வார்த்தையில்

புரிந்து கொள்வாய் எந்தன்

மனதை..!!



நான் சொல்ல மறந்த வார்த்தைகளை

பக்குவமாய் பட்டியளிடுவாய்..,

"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "

"மறக்காம எண்ண தேச்சி குளிடா"

"ரோட்ல பத்திரமா பாத்து போடா"

" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "



என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்

என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே

அம்மா..!!



உன்னை என்னிடம் இருந்து பிரித்த

இந்த வாழ்க்கையை திட்டுவதா..?

இல்லை..

உந்தன் மேல் நான் வைத்திருக்கும்

பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?

தெரியவில்லையே அம்மா..!!



உனக்காக உயிரற்ற பொருட்களால்

அன்பு சின்னம் அமைத்து என்ன

பயன்..!!



உதிரம் என்னும் பசை தடவி

எலும்பு என்னும் கற்கள் அடுக்கி

உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்

அம்மா என்றும் உந்தன்

காலடியில்...!!!