Pages

Tuesday, November 22, 2011

முதியோர் இல்லம்


முவ்வேலை உணவு ஒன்றானது

அழுகை யதார்த்தமானது உனக்கு

அவன் வருகையை எதிர்பார்த்து

கண்கள் துவண்டு போனதே மிச்சம்

உன் கண்களில் கண்ணிற்

கடலை கண்டேன்

அம்மா என்னும் உறவை துறந்து

வழியனுப்பி வைத்த அன்பு

மகனை எண்ணி.....!!!!!!!!!

ஈழ தமிழச்சி ................!

பெண்ணின் அங்கத்தை
பேன்பார்த்த ராணுவம்
கர்ப்பை காமத்தால் ரசித்த
கயவர்களை கண்டு
சீறுகிறாள் நம் செந்தமிழ் தாய்

முடியும் விடியலாய்
மின்னும் வானம்
என் பக்கத்து தமிழன்
ஈழத்தில் ஒளிரும் போது

என்றோ அரை கூவிய
புள்முளைக்காக சீனாவை போல்
பேர் பெற்ற நாடாய் மாறும்

அன்று
என்னை தீட்டிய ராணுவமே
என் தமிழை தீட்டி
தங்க பதக்கம் தரும் நாள்
என்னாள் என்றோவென

காத்திருக்கிறோம்
கண்ணீர் சொட்ட
கரையை தேடும்
ஈழ தமிழச்சியாய் ................!

நட்பா? காதலா?

நட்பா? காதலா?

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
               நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
               நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
               நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
               நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
               நட்பு தான்

எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
               நட்பின் காதலும்,
               காதலின் நட்பும்
.