Pages

Monday, January 31, 2011

மரணத்தை நோக்கி

மரணத்தை நோக்கி
நகரும் நம் வாழ்கையில்
நம்மை வாழ சொல்லி
வற்புறுத்துவது
காதலும்,நட்பும் தான்...
நட்பை நேசி.
காதலை சுவாசி...


Sunday, January 30, 2011

சொர்க்கத்தில்

வாழும் போதே புண்ணியம் செய்சொர்க்கத்துக்கு போவாய் என்றுஎன்னிடம் பலர் சொல்கிறார்கள்நான் இப்பவும் சொர்க்கத்தில் தான்இருக்கிறேன் என்பதை அறியாமலே 

....ஆமாம் நான் தான் உன் இதயத்தில்
இருக்கிறேனே ..

Thursday, January 27, 2011

பிரிவின் ரணங்கள்....

யாராலும் நிரப்ப முடியாமல்
நீ விட்டு சென்ற தனிமையின்
வெறுமையான கணங்களை
என் கவிதைகளால் நிரப்ப முயன்று
முடியாமல் போய்
கடைசியில் ...........
என் கவிதைகளிலும் உன்னை மட்டுமே நிரப்புகிறேன்......

Saturday, January 22, 2011

கண்ணீரை பிடிக்கும்..

கண்ணீரை பிடிக்கும்
அது என் கவலைகளை
தீர்க்கும் வரை.
காதல் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாக இருக்கும் வரை...!!!


Friday, January 21, 2011

ஏமாற்றங்களே வாழ்க்கையாகிப்போனதால்.

ஏமாற்றங்களே
வாழ்க்கையாகிப்போனதால்..
அதைப்பற்றிய ஏக்கங்கள்
என்னிடமில்லை..!
ஆனால்
அதன் பெறுமதியை பற்றி
என்னிடம் கேளுங்கள்
அன்று, உங்களுக்கும்
புரியும் இவன்
பட்ட துன்பத்தின் நீளம்..........!!!! 

எழுதியவர் : சதீஷ் 

 


Wednesday, January 19, 2011

நட்பு உணர்வுகளின் உண்மை

கருவிலே ;
தாயவள் சொன்னாள்
நட்பின் தலையங்கத்தை ,

நட்பு
ரத்த அணுக்களில்
வி(ழு)ந்து முளைத்த
உயிர் அணுக்கள் ;

நட்பு
இதய வாயிலில் இளைப்பாற
கதவு திறக்கும்
இசைக்காற்று ;

நட்பு
மூளை தேசத்தில் பாதுகாக்கப்பட்ட
காலப்பெட்டகம் ;

நட்பு
பாதச்சுவடுகளை கண்காணிக்கும்
கணிப்பொறி;

நட்பு
தசைகளுக்குள் தைக்கப்பட்ட
பூங்காவனம் ;

நட்பு
எலும்புகளுக்கும் , நரம்புகளுக்கும்
இடையே பூட்டப்பட்ட
பூ விளங்கு

நட்பு
உயிர் மொழியை கண்டறிய
மனம் எழுதும்
புதுக்கவிதை ;

நட்பு
வெறும் வார்த்தையல்ல ,
தொடரும் வாழ்க்கையின்
உயிர் கூட்டல் ;

நட்பு
சமுதாயத்தின் ஆணிவேர்

நட்பு
உணர்வுகளின் உண்மை
உறவுகளின் உன்னதம்

எழுதியவர் :பூவிழி

Monday, January 17, 2011

கண்ணீர் கவிதை

என்ன மறந்து விட்டேன்
பெண்ணே....!
எத்தனை முறை
அழுதேன் என்று....!
காதல்
இருக்கும் வரை
இது போன்ற
கண்ணீர் கவிதைகளும்
இருக்கும்......!
இங்கு வார்த்தைகள்
மட்டுமே
மாறுகின்றன.....!
ஆனால்
வலிகள் மாறவில்லை.....!

Friday, January 14, 2011

வாழ்த்து

அகிலமெங்கும் அமைதி பொங்க
ஆள்பவர் மனதில் மனித நேயம் பொங்க
மனையெங்கும் மகிழ்ச்சி பொங்க
மண்ணிலெங்கும் கதிர் மணிகள் பொங்க
அனைவரிடமும் ஆன்மிகம் பொங்க
கற்பக மூர்த்தியின்
பொற் பாதம் பணிந்து
அனுப்புகிறேன் ஒரு வாழ்த்து !!!
இனிப்பான கரும்பின்
சுவையையும் சேர்த்து !!!!!

Thursday, January 13, 2011

என் கவிதையே

உன்னைப் பற்றி
ஓராயிரம் கவிதைகள்
எழுதிவிட்டேன்..
சந்தோசப் பட்டுக்கொண்டன
கவிதைகள்
உன்னைப் பற்றி
எழுதியதற்காக...

"அன்றைய காதலர்கள்"

பெண்ணே...!
இன்று உன் மொபைல்க்கு
என்னை காதலிக்கிறாயா
என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு
இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆகியும்
பதில் வரவில்லை என
கோபமாக நான்
இருந்து கொண்டிருக்கும் வேளையில்....
என் நினைவில்
வந்து போனார்கள்
அன்றைய தினத்தில்
கடிதத்தின் மூலம்
காதலிக்கிறாயா என்று
கேட்டுவிட்டு
பல நாட்கள் காத்துக் கிடந்த
"அன்றைய காதலர்கள்" 

 

Wednesday, January 12, 2011

நட்பு ...

ஒரு இதயத்தையும் பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக ஒரு இதயத்தையே பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில் யோசித்தது காதல்!
யோசிக்காமல் கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை கனவாக்கியது காதல்!
என் கனவுகளை இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும் காதல் வேண்டாம்!
நன்மை தரும் நட்பைக்கொடு இறைவா 

 எழுதியவர் :செமினா

Monday, January 10, 2011

உயிர் நண்பர்கள்

 அவசரமாக புறப்பட்டு
ஆபத்தில் சிக்கினேன் சாலையில்
அவசர உதவிக்கு 108 அழைக்கப்பட்டது
108 ஐ விட விரவாக
வந்து சேர்ந்தனர் எனது நண்பர்கள்....

எழுதியவர் : சதீஷ் 

 

Sunday, January 9, 2011

உன் நினைவாலே!

என் நினைவுகள் ஒரு நாள் உன்னைச்சேரும்
உன் நினைவாலே வாடுவது நானல்ல
என்னுள் இருக்கும் நீதான் ..!!

எங்கோ தூரத்தில் நீ இருந்தாலும்
உன் நினைவாலே என்னை
ஆட்டுவிப்பதும் ஏனோ...!!

உன் நினைவுகள் என்னை சேர்வதால் தான்
உன் நினைவாலே நானும் வாடுகிறேன்
உன் நினைவே என்னுயிரை தாங்குகிறது..........!!!!!!!

எழுதியவர் : சதீஷ் 

Friday, January 7, 2011

தன் குழந்தையிடம்.தோல்வி சுகமானது !!!

 தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.

நாலுகாலால் தவழும் போதே
ஓட்டத்தில்
ஆமையாவது
அம்மாக்களுக்கு தனி சுகம்.

யார் முதலில் எனும்
சாப்பாட்டு மேஜைகளில்
தோற்றுத் தொப்பியடிப்பது
அப்பாக்களுக்குச் சுகம்.

தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.

இவன் தான் காதலன் என
பிடிக்காத ஒருவனை
அவள்
அறிமுகப் படுத்தும் வரை !

Thursday, January 6, 2011

எனக்கு . . . யார் ஆறுதல்?

அழுகின்ற குழந்தைக்கு - அம்மாவின் ஆறுதல்
ஆசைப்பட்ட குழந்தைக்கு - அப்பாவின் ஆறுதல்
இமயத்தை கேட்டவனுக்கு - இனிமையான ஆறுதல்
ஈர்ப்பு விசைக்கு - ஈகையான ஆறுதல்
உலகின் ஒளிக்கு - உணர்ச்சியாய் ஆறுதல்
ஊமையான உறவிற்கு - ஊக்கம் ஆறுதல்
எளிமையான வாழ்விற்கு - எதார்த்தம் ஆறுதல்
ஏக்கமான இதயத்திற்கு - ஏனிந்த ஆறுதல்
ஐயமில்லா மனதிற்கு - ஐக்கியம் ஆறுதல்
ஒற்றுமையான உயிர்களுக்கு - ஒருமித்த ஆறுதல்
ஓவியனின் உள்ளத்திற்கு - அவன் ஓவியமே ஆறுதல்
ஒளவையின் காலத்திற்கு - ஒளவையே ஆறுதல்
அத்தனைக்கும் அற்புதமான ஆறுதல்
எனக்கு . . .
யார் ஆறுதல்?

Wednesday, January 5, 2011

வெற்றி

தோல்வி என்பது தள்ளி போடப்பட்ட வெற்றி தான்....
அதற்காக வெற்றி அடைவதற்கான நாட்களை மட்டும் தள்ளி போட்டு விடாதே......

எழுதியவர் :வசுகிரஜெந்திரன் 

 

Tuesday, January 4, 2011

நிச்சயம் ஒரு நாள் மாறும்.

வலிக்கின்ற
இதயமும்,
வடிக்கின்ற கண்ணீரும்,
நிச்சயம் ஒரு நாள் மாறும்..
உண்மையான
அன்பும்,உறுதியான
நம்பிக்கையும் இருந்தால்.

எழுதியவர் : கவிதா 

 

Monday, January 3, 2011

கடைசி வரை தொடர வேண்டும் நம் உறவு....

 

அறிமுகம் இல்லாமல் வந்தோம்
அடிகடி பேசி கொண்டோம்
உறவுகளுக்கு மேலே,
உயிர் ஆனோம் .

காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசி வரை தொடர வேண்டும்
நம் உறவு.

எழுதியவர் : கவிதா 

Sunday, January 2, 2011

இதயம் மட்டும் உன்னைத் தேடி துடிக்கிறது

இரவுகள் கண்களைக் கொள்ளை
கொள்ளும் போது உன்
நினைவுகள் என்னைத்
தாலாட்டி செல்கின்றது...
உன் நினைவுகளோடு
தூங்குகின்றன என் கண்கள்
ஆனால் இதயம் மட்டும்
உன்னைத் தேடி துடிக்கிறது
நீ இல்லை என்றால்
நின்று விடும் என்
இதயத் துடிப்பு..............!!!!!!!!!!!

எழுதியவர் :ரெங்கா

 

நினைவுகள்

நினைவுகள் இல்லை என்றல்
இதயமும் ஒரு கல்லறைதான்....!


எழுதியவர் : சதீஷ் 

என் காதல் வலி..

என் காதல் வலி.. 

பெண்ணே...!
உன்னைப் பார்க்கும் போது
பேசத் துடிக்கும் வார்த்தைகள்
மெளனமாகி விடுகின்றது
பெண்ணே....
உன்னை நினைத்து மரணித்த போது
என்னை ஆழமாய் விரும்பினாய்.
நான் ஆவியாய் அலைகின்றேன்.
பெண்ணே....
மறு ஜென்மம் மலரும் போது
நான் நீயாகவும்... நீ... நானாகவும்
அப்போ புரியும் என் காதல் வலி............!!!!!!!!!!!


0


எழுதியவர் :ரெங்கா