Pages

Tuesday, November 30, 2010

நண்பர்களையே நினைத்து வாழ்வோம்.....

 

பிறந்த இடம் ஒன்று,,,,

வளர்ந்த இடம் ஒன்று....

நண்பர்களாக இணைந்த இடம் ஒன்று.....

இருக்கும் வரை

நண்பர்களுடன் இணைந்து வாழ்வோம்...

இறக்கும் வரை

நண்பர்களையே நினைத்து வாழ்வோம்.....

Monday, November 29, 2010

நண்பேண்டா

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது!

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்!
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக!

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை!

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது....!!!

Sunday, November 28, 2010

நண்பா உன்னை விடவா காதல் உயர்ந்தது

கல்லறையில் மாலையிட்டு

கடைசி சொட்டு கண்ணீரில்

கலங்குகிறாயே செல்ல நண்பனே !

காதலுக்காக உயிர்விட்டேன் என்று

Friday, November 26, 2010

பிரிவினால் புரிந்துகொள்...!!

புதிரான வாழ்வில்
நம்மைப் புரிந்து கொண்ட
ஒரு சொந்தம் "நட்பு"...!!

இந்த நட்பைப் புரிந்து கொள்ள
ஒரு நல்ல சந்தர்ப்பம்
"பிரிவு"...!!

உன்னை விட்டுப் பிரிகிறேன்
புரிந்து கொள்ள...!!

 

 

Monday, November 22, 2010

பாவம் பிரிவு

 

நம் நட்பின்
மீது
பொறமைகொண்டது
பிரிவு !!
அதனால் தான்
பிரிக்க துடிக்கிறது
நம்மை-பாவம்!
அதற்கு
எப்படி தெரியும்
நம்மை பிரித்தாலும்
என்றும் பிரியாத
நினைவுகள்
நம்மிடம் இருக்கிறது
என்று !!!!!!!!!!!

Sunday, November 21, 2010

வாசமில்லாத பன்னீர்த்துளிகள்...


வாசமில்லாத பன்னீர்த்துளிகள்...

இதயத்தில் வலிக்கச்செய்தது...  

கண்ணில் வடியும்

கண்ணீர்த்துளிகள்.....


Saturday, November 20, 2010

கற்சிலைகள் நமக்கெதற்கு.....



அன்பை மட்டுமே

அன்பளிப்பாக கொடுக்கும்

அன்னையிருக்க

ஆயுதம் ஏந்திய

கற்சிலைகள் நமக்கெதற்கு.....

இதயத்தினுள் வலியோ ஆயிரமாயிரம்..



நான் இதுவரை

எழுதிய கவிதைகள்

ஆயிரமாக இருக்கலாம்..

என் இதயத்தினுள் இன்னமும்

உன் நினைவுகள்

கொடுக்கும் வலியோ ஆயிரமாயிரம்..

Monday, November 15, 2010

தாயின் கருவறை......



தமிழ்மொழிக்கு

ஈடான மொழிதான்

இவ்வுலகில் உண்டோ?

தாயின் கருவறைக்கு

ஈடான சுகமான வலிதான்

காதலை சுமக்கும்

இதயத்திற்கு உண்டோ?

Sunday, November 7, 2010

வாழ்க்கை



வாழ்க்கை ஒன்னும் mp3 அல்ல... நமக்கு பிடிச்ச பாட்ட போட்டு கேட்பதற்கு ... அது ரேடியோ மாதிரி வர்ற பாட்ட நாமதான் ரசிக்க பழகணும்..

நான் வணங்கும் தேவதையே



சுமந்துபெற்ற
காரணத்தினால் தானோ
எப்போதும் நீ
என்னைச்
சுமப்பதிலேயே
சுகத்தைக் காண்கிறாய்...!

அழகு


அழகு படைத்த
பெண்ணுக்குமுன்னால்
அறிவுள்ள ஆணும்
பித்தனே!

Thursday, November 4, 2010

உயிர் நட்பு(பூ)



அனைவரும்
தன் மனதிற்கு பிடித்தவரை
"உன்னை
என் இதயத்தில் வைத்திருக்கிறேன்."
என்றுதான் சொல்வார்கள்.
என்னை பொறுத்தவரை
"நீங்கள்
என் இதயத்தில் இல்லை!
என் ஆன்மாவில் இருக்கிறீர்கள்!
என் இதயம் இறந்தபின்னும்
என் ஆன்மா இறப்பதில்லை!
எத்தனை பிறவி
பிறந்தாலும் பிறக்காவிட்டாலும்
என் ஆன்மாவோடு கலந்திருப்பிர்கள்!
அதுதான் நம் உயிர் நட்பு(பூ)."!!!

கண்களுக்கும் கண்ணீருக்கும்..............


கண்களுக்கும்

கண்ணீருக்கும்

உள்ள இடைவெளி

இவ்வளவுதான்..

கண்களால்

உருவங்களை

பார்க்க

மட்டுமே முடியும்.....

கண்ணீரால்

மட்டும்தான்

உள்ளத்தின் வலிகளை

உணர முடியும்......

Wednesday, November 3, 2010

சுமக்கும் தாய்மடி...





குப்பைத்தொட்டி....

அனாதையாக வீசெறியப்படும்

குழந்தைகளை

சுமக்கும் தாய்மடி...

சிந்தும் நட்சத்திரங்கள்.....




செயற்கையாக

சிந்தும் நட்சத்திரங்கள்.....

வெடித்து

சிதறும் பட்டாசுகள்...

அம்மா.......



சிறியதாய் ஒரு கவிதை எழுதச் சொன்னார்கள்,
எழுதினேன் - "அம்மா" என்று.
இன்னும் சிறியதாய் எழுதியிருப்பேன். "நீ" என்று.
கேட்டது என் தாயாக இருந்திருந்தால்

- நன்றி உணர்ச்சிதுளிகள்

Tuesday, November 2, 2010

ஒரு கவிதை சொல்ல வேண்டும்



ஒரு கவிதை சொல்ல வேண்டும் உன்னை வர்ணித்து வித்யாசமாய் வார்த்தையாக அல்ல வாக்கியமாக அல்ல வர்னைகளால் அல்ல வஞ்ச புகழ்ச்சியாய் அல்ல சொல்கிறேன் நீ என்னிடம் சொல்லும் பதில் போல் மௌனம...

வேலை

கை நிறைய சம்பளம்
பை நிறைய பொருட்கள்
பிறர் பொறாமை படும் வகையில் வாழ்க்கை
இறுதி வரை நாமே ராஜா என்ற நம்பிக்கை......
கணிப்பொறி துறையில் படித்த அவனுக்கு
கொடுத்தார்கள் இப்படி வாக்குறுதிகள்
இன்றும் அவன் கனவு காண்கிறான்.
வேலை சந்தோஷமாக இருக்கும் என்று ............
என்னைப்போல........

-தோழனின் கவிதை
(உணர்ச்சிதுளிகள்)