Pages

Monday, September 12, 2011

மௌனம்

நண்பனே!!!
உன் அருகில் அமர்ந்து ஆயிரம்
வார்த்தைகள் பேச நினைத்தேன்-ஆனால்
என் அருகில் நீ இல்லை
என்னை சுற்றி எல்லாரும் இருக்க
என் மனம் உன்னை சுற்றி திரிந்தது

உன்னுடன் பேச முடியாமல்
கண்ணீர் துளிகள்
ஆறாய் ஓட ,
கண்கள் உன்னை தேட
உன் நினைவுகளுடன் நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் நீ என்னை தேடி வந்தாய்
உன்னை கண்டதும் பேசும் என் வாய்
பேசமுடியாமல் மௌனம் கொள்ள
உன் அருகில் அமர்ந்த நான் என்
உள்ளத்தின் அசைகளை சொல்லமுடியாமல்
மௌனத்தின் மூலம் வெளிபடுதினேன்


உன் தொலைவில் இருந்து தொலைபேசில்
பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட
உன் அருகில் அமர்ந்து மௌனமாக
பேசும் வார்த்தை பெரியது

எப்போதும் பேசிக்கொண்டு இருப்பதை
விட பேசாமல் சிலமணி நேரம்
மௌனம் கொள்ளும் மனதில் தான்
சாதனைகள் வளர முடியும்

இந்த உலகில் வீன் பேச்சி
பேசினால் தான் குற்றம்- ஆனால்
மௌனம் என்ற பேசினால் உலகை
வெற்றி கொள்ள முடியும்

என்றும் மௌனமாய் உன்னுடன்
வாழ ஆசை படுகிறேன்
என் அன்பு நண்பன் உன்னுடன்

என் மௌனம் இந்த கவிதையில்
வடிவம் பெற்றுள்ளது
என் நண்பனுக்காக!!!

3 comments:

  1. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete
  2. "உன்னுடன் பேச முடியாமல்
    கண்ணீர் துளிகள்
    ஆறாய் ஓட ,
    கண்கள் உன்னை தேட
    உன் நினைவுகளுடன் நாட்கள் கழிந்தன."

    நானும் பேச நினைக்கிறன்,
    என் தோழியிடம்....,
    நிரந்தர பிரிவு இறைவனால்....
    உங்கள் வரிகளை படிக்கும் போது
    அவள்தான் நெஞ்சில் இருக்கிறாள்..

    ReplyDelete