Pages

Thursday, January 16, 2014

என் குழந்தை




குழந்தை
தெய்வத்தின் காட்சியாய்
அன்பின் சாட்சியாய் ,
அரவணைக்க ஆசையாய் ,
எத்தனை இன்பம் ,
எதை சொல்ல !

அவள் என் நிகழ் கால சொர்க்கம் ,
எதிர்கால நண்பன் ,
காலத்தின் கட்டளையில் ,
என்னுடைய ஊன்றுகோல் !

ஆயிரம் துன்பங்கள்
அனைத்தும்
உன் சில்லறை சிரிப்பில் ,
சிதறி உடைந்தது !

என் நெஞ்சின் அழுத்தத்தை
உன் பிஞ்சு கால் சூறையாடும் ,
உன் பக்கத்தில் இருக்கவே ஆசை
உன் பால் மனம் ருசிக்க ஆசை !

நீ
நான் கண்டெடுத்த புதையல் ,
தங்கம் வைரங்கள் கூட
உன் காலுக்கு கீழ்தான் ,
எத்தனை கோடி கொடுத்தாலும்
பெற்றிட முடியாத என் பொக்கிஷம் !

பயணம் இனிமையாகும் ,
உன் பிஞ்சு கைகள் டாட்டா சொல்லும்போது ,
நீ ஓடிவந்து என் தோல் சேர்கையில்
என் சுமைகள் எல்லாம் இறங்கி ஓடும் !

என் உறக்கத்தை கலைத்து ,
விடியளைக்காட்டும் உன் அழகு முகம் ,
நீ ஆசையாய் அடிக்கும் அடிகள் கூட
என் முகத்தில் ஒத்தடம் கொடுப்பதாய்!

எத்தனை பதவிகள் வந்தாலும்
எத்தனை பட்டங்கள் பெற்றாலும்
நீ ஆசையாய் கூப்பிடும்
"அப்பா " வார்த்தைக்கு இணையாகுமா !

எந்த விழா வந்தாலும் ,
அதை எல்லாம் தூரம் தள்ளும்
உன் பிறந்த நாள் சுகம் !

உன் அம்மா உன்னை 10 மாதம் சுமந்தால்
நானோ உன்னை காலமெல்லாம் சுமக்கிறேன் ,
உன் புத்தக சுமையோடு
ஏன் இதயத்தையும் சேர்த்தே எடுத்து சென்றாயோ !

கன்றுக்குட்டி
தாய் பசுக்காக காத்திருக்கும்
இங்கே தாய்ப்பசு
உனக்காக அல்லவா காத்துகிடக்கு !

தங்கத்தில் தரைபோட்டு
பளிங்கு கல்லால் படிக்கட்டி
ஊர் மெச்ச வீடு கட்டினேன் ,
நீ ஒருத்தி விளையாட அகம் மகிழ்ந்தேன் !

நீ எனக்கு பிள்ளை இல்லை ,
நான் தான் உனக்கு பிள்ளை ,
நீ ஆணையிட்ட அன்புகட்டளைகளை
அடியேன் அப்படியே செய்ய தயார் !


No comments:

Post a Comment