Pages

Tuesday, February 1, 2011

என் அப்பா

அப்பா
உள்ளத்தில் உண்மையின் அழகன்
நிம்மதி தொலைத்து,
தினம் தோறும் உழைக்கும் தலைவன்
பேர் சொல்ல மட்டும் பிள்ளைகளின் கைத்தடி
மனைவி பிள்ளைகளின் நிம்மதியியே தன் வாழ்வென நினைக்கும் தூயவன்
கனவு கண்டிடுவார் நினைவெல்லாம் குடும்பத்திற்காகவே
என்ன ஒரு கலக்கம்
கண்டவர்கள் மேல் என்ன நடுக்கம்
அடுத்தவர் பார்வை தன் செல்வங்கள்மேல் படாது என்ன ஒரு காவல்
என்ன செய்தோம் அந்த காவலனுக்கு நாம் கடைசிவரைக்கும்
பாசத்தை விட அவர் நம்மில் கண்டதுதான் என்ன
கடைசிவரை கையேந்த விட்டதும் இல்லை எம்மை கண்கலங்கிப்பார்த்ததும் இல்லை
என் அப்பா நான் செய்ததெல்லாம் தப்பப்பா உங்களை நான் -
தாங்காது விட்டது ஏன் அப்பா?


2 comments:

  1. தான் அப்பா ஆகும் போது தான் அப்பாவின் அருமை தெரிகிறதோ?

    ReplyDelete
  2. follow gadget serththaal nandraaga irukkum

    ReplyDelete