Pages

Sunday, August 7, 2011

அம்மாவுக்காக ஒரு கவிதை

அம்மா என்று அழைத்ததையும்

கவிதையாய் நீ உணர்ந்தாய்

என்னை முதலில் கவி என்று

சொல்லி நீ மகிழ்ந்தாய்

உன் பெருமையை பற்றி கூற

நான் பெரிய கவி அல்ல

இருந்தும் சொல்லுகிறேன்

உனக்கென ஒரு கவிதை

என்னை கருவில் சுமந்தவளே

உன்னை நெஞ்சில் சுமக்கின்றேன்

சுமப்பதும் ஒரு சுகம் என்று

என்னை சுமந்து நிருபிதாய்

எத்தனை பொறுமை உன்னில்

எப்படி கற்று கொண்டாய்

உன் பாசத்தில் நினையவிட்டு

கண்ணாய் என்னை காத்தாய்

உன்னை பற்றி மட்டும் யோசிக்க ஏன்

மறந்தாய்

ஒரு வேளை கூட தவற வில்லை

நான் உண்ணாமல் நீ உண்டதில்லை

சிறு தவறு செய்த போதும்

சிறு கோபம் என்மேல் உனக்கு இல்லை

சிரித்த முகமென்றால் உன் முகம்

நினைவில் வரும்

பசி என்றால் நீ துடிப்பாய்

பசி உனக்கல்ல எனக்கு என்று

பாசம் வைக்க பலபேர் உண்டு

பாசம் உயிராய் நினைக்க

உன்னை தவிர யாருண்டு

உன்னை போல் நானிருக்க

எனக்கும் கற்று கொடு

இந்த உலகத்தில் எனக்கு பிடித்த இடம்

என்றும் தாய் வீடு

நல்ல வேளை நான் பெண்ணாய் பிறக்க

வில்லை

பிறந்திருந்தால் கடமை என்று

புகுந்த வீடு அனுப்பி இருப்பாய்

ஆணாய் பிறந்ததனால் ஆயுள்

முழுதும் உன் அன்பில் நனைய

எனக்கு வாய்ப்புண்டு

என் மடியில் நீ தூங்க

நான் தாலாட்ட சில மணி நானும் தாயாய்

இன்னும் ஒரு வரம் வேண்டும்

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

நீயே என் தாயாக எப்போதும்

எதையும் நினைத்ததில்லை

உனக்காக என்று

எதுவும் ஈடு இல்லை உனகினையாய் இங்கு

No comments:

Post a Comment