Pages

Monday, August 29, 2011

தண்ணீரும் அழகு தானடா...!

 பல வண்ணம் கலந்த
கலவை மட்டும்
அழகல்ல...

ஒரு வண்ணம்
கொண்ட
வெண்ணிலவும்
அழகு தான்...

ஒரு வண்ணம் கொண்ட
நள்ளிரவும்
அழகு தான்...

ஒரு வண்ணம் கொண்ட
கடல் கூட
அழகு தான்...

இதையெல்லாம்
விட
உன்னிலிருந்தும்
என்னிலிருந்தும்...!
வெளிப்படுகிற
கண்ணீர் என்ற
நிறமில்லா
தண்ணீரும் அழகு தானடா...! 

 - கவி பித்தன் சதீஷ்

No comments:

Post a Comment