Pages

Monday, December 20, 2010

நான் நேசிக்கும் ஒரு தெய்வம், என் அம்மா

நான் நேசிக்கும் பூஜிக்கும்
ஒரு தெய்வம், என் அம்மா
நான் சிரிக்கையில் சிரித்தாய்
நான் அழுகையில் எனக்காக கண்ணீர் வடித்தாய்
நான் வாழ துடிக்கும் உன் இதயம்
என்றும் எனை தாங்கும் உன் ஆசை மடியும்
நான் உண்ட மீதி நீ உண்பாய்
எனை உறங்க வைக்க கண் விழித்திருப்பாய்
உன் விருப்பம் நான் அறிந்ததில்லை
என் ஆசை நீ மறந்ததில்லை
கேட்டதை எல்லாம் கொடுத்தாய்
கேட்கும் போதே கொடுத்தாய்
கல்லுக்குள் கடவுளை தேட மனமில்லை
உனைஅன்றி எனக்கு வேறு துணையில்லை
நாட் கணக்கில் விரதமென்று பட்டினி கிடப்பாய்
ஒரு பொழுது நான் சாப்பிட மறுத்தால், உன் உயிர் நோக துடிப்பாய்
வன் சொல்லலால் சுட்டதுண்டு உன்னை
எதையும் கேளாமல் மன்னிப்பாய் என்னை
இது ஒப்பந்தந்தில் சேர்ந்த சொந்தமன்று
ரத்தத்தில் தோன்றிய பந்தமென்று..
நான் நேசிக்கும் பூஜிக்கும்
ஒரு தெய்வம் என் அம்மா………….. 

எழுதியவர் : விக்னேஷ் 

 

No comments:

Post a Comment